இரண்டாவது கணவருடன் ஜோடியாக இருக்கும் தாமரை.... யாரும் பார்த்திராத மிக அரிய புகைப்படம்! எப்படி இருக்கின்றார் தெரியுமா?
பிக்பாஸ் அல்டிமேட்டில் கலக்கி கொண்டிருக்கும் நாட்டுபுற கலைஞர் தாமரை செல்வி அவரின் கணவருடன் இருக்கும் மிக அரிய புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி முடிந்த பிக் பாஸ் 5 இல் முகம் தெரியாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் தாமரையும் ஒருவர்.
ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கை, பேச்சு, குணாதிசயத்தை கண்டு இவர் 2 வாரத்தில் கிளம்பி விடுவார் என கணித்தவர்களின் எண்ணத்தை பொய்யாக்கிவிட்டு இறுதி வாரம் வரை இருந்தார்.
இவருக்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகியுள்ளது.
அதனால் இவர் தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார்.
இவருக்கு கடந்த சீசனில் கிடைக்காத டைட்டில் வின்னர் பட்டத்தை அல்டிமேட்டில் வெல்ல வேண்டும் என்ற குரல்கள் இணையத்தில் ஒலிக்க தொடங்கியுள்ளன.
வெகுளித்தனமான பேச்சு, பாசம், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற குணம், டாஸ்க் என்று வந்ததும் இறங்கி ஆடுவது என ஆண் போட்டியாளர்களையே பின்னுக்கு தள்ளி விளையாடி கொண்டிருக்கிறார் தாமரை. இந்த நிலையில் அவரின் கணவருடன் இருக்கும் அரிய புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.
இதேவேளை, இவருக்கு முன்னதாக தன்னை ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்தது குறித்தும் அந்த சோகமான வாழ்வில் இருந்து வெளியே வந்த பிறகு கிடைத்த அழகான காதல் கணவர் குறித்தும் பிக் பாஸில் இவர் கூறியது நாம் அனைவரும் அரிந்த ஒன்றே.