தாலியை திருடிட்டாங்க... பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சினேகனை நினைத்து கதறி கதறி அழுத கன்னிகா!
சினேகன் பிக் பாஸ் அல்டிமேட்டில் தனது காதல் மனைவி குறித்து அடிக்கடி உருக்கமாக குறிப்பிட்டு வருகின்றார்.
தற்போது கன்னிகா யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில் அவர் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படம், வீடியோ என்று அனைத்தையும் பகிர்ந்து வருவார்.
சினேகன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகும் கூட அவரை நினைத்து காதல் கவிதைகளை எழுதி கன்னிகா பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் கன்னிகா, ரசிகர்கள் உடன் உரையாடல் ஒன்றை நடத்தி இருந்தார்.
அதில் அவர் தன்னுடைய தாலி திருட்டுப் போன விஷயத்தை கூறியிருந்தார். அது என்னவென்றால், முதன் முறையாக சினேகன் இடம் கன்னிகா காதலை சொன்ன விதத்தை பல போட்டிகளில் கூறி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
முதன் முதலாக காதலைச் சொன்னது சினேகன் என்றாலும் அதற்கு பதில் சொல்ல கன்னிகா 5 மாதம் எடுத்துக்கொண்டார். அதேபோல் கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த தீப ஒளியில் தான் தன்னுடைய காதலை கன்னிகா சொல்லி இருக்கிறார்.
அப்போது கையில் தாலி, மஞ்சள் கயிறுடன் போய் புரபோஸ் செய்திருக்கிறார். அந்த தாலியை கையில் வைத்து சினேகன் போட்டோவும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மிகவும் சென்டிமென்டாக இருவரும் அதை பத்திரமாக வைத்து இருந்தார்கள். ஆனால், ஒருநாள் அந்த தாலி திருட்டு போய்விட்டது.
அதை தாங்கிக்கொள்ள முடியாமல் கன்னிகா அழுது கொண்டே இருந்திருக்கிறார், இதை தான் கன்னிகா ரசிகர்களிடம் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.