பிக்பாஸ் புகழ் நடிகை திடீரென மரணம்- அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்
பிரபல ரியாலிட்டி ஷோ என்றால் இந்தியாவில் பிரபலமாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதிலும், இந்தியாவில் முதன் முதலில் இந்தி மொழியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. தற்போது வரை அங்கு 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன.
திடீரென மரணம்
இந்த நிலையில், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான நடிகை சோனாலி போகத் 41 வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் இந்தி திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர், அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். கடந்த 2019ம் ஆண்டில் அரியானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

காரணம்
இதனிடையில், வேலை காரணமாக கோவா சென்ற நிலையில் திடீரென மாரடைப்பு நிகழ்ந்தது. இதனால் உயிரிழந்துள்ளார்.
இவரின் மறைவுக்கு திரையுலகினர்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு, யஷோதரா போகத் என்ற மகள் உள்ளார்.
இவரின் கணவர் கடந்த 2016ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
