Bigg Boss 9:பிக்பாஸ் வீட்டின் வில்லியாக மாறிய வியானா.. எரிச்சலில் சக போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு வியானாவிற்கு தகுதியில்லை என சக போட்டியாளர்கள் டாஸ்க்கில் கூறியதை மனதில் வைத்து வில்லியாக மாற ஆரம்பித்திருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
நேற்றுமுன் தினம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
வியானா கொடுத்த ரியாக்ஷன்
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமாகிய முதல் நாள் டாஸ்க்கில் வியானா, திவாகரன், கலையரசன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு நாள் மாத்திரம் தகுதிக் கொண்டவர்கள் என சக போட்டியாளர்களால் கூறப்பட்டார்கள்.
இதனை மனதில் வைத்து வியானா மற்ற போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் வித இணையவாசிகளை எரிச்சலடைய வைத்துள்ளது. வாட்டர் மிலன் ஸ்டார் தான் தன்னை ஒரு அழகன் மற்றும் சிறு குழந்தை போன்று நினைத்துக் கொண்டு நடந்துக் கொள்கிறார் என்றால் வியானாவின் நடத்தை பிக்பாஸ் வீட்டிலுள்ள பிரபலங்களையும் எரிச்சலடையச் செய்துள்ளது.
நேற்றைய தினம் முதல் பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் வியானா நடந்துக் கொள்ளும் விதம் இந்த வார நாமினேஷனில் தாக்கம் செலுத்தும் என சின்னத்திரை ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |