Bigg Boss 9: பிக்பாஸ் வீட்டில் கனி பார்த்த வேலை- ஆவேசமாக கத்திய ஆதிரை- இதற்கு காரணம் என்ன?
“ஏன் சாப்பாட்டில் உப்பு போடுறீங்க..” என பிக்பாஸ் வீட்டில் கனி பார்த்த வேலையால் கோபமடைந்த ஆதிரை கண்டித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
கடந்த வாரம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
கனி பார்த்த வேலை
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் உள்ளே பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கின்றன.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் கனி, பிரவீன் தேவசகாயம் இருவரும் இணைந்து கோழி கறியில் உப்பு அதிகமாக போடுகிறார்கள். இது குறித்து கேமராவிற்கு முன் சொல்கிறார்கள். அவர்கள் நினைத்தது போன்று பிக்பாஸ் வீட்டில் சண்டை வெடிக்க ஆரம்பித்துள்ளது.
சாப்பாட்டிற்கும் ஆதிரைக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாவிட்டாலும் சாப்பாட்டை வீணாக்குவதால் ஆதிரைக்கு கோபம் வருகிறது. இந்த பிரச்சினைக்கு பிக்பாஸ் என்ன பதில் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |