உங்களுக்கு என்ன? சபரிக்காக ஓடி வந்து மொக்கை வாங்கிய கனி- சூடுபிடிக்கும் பிக்பாஸ்
டாஸ்க் முடிந்தவுடன் பார்வதி பேச ஆரம்பிக்கை பொழுது, சபரி அவரை அவரது இடத்தில் நிற்குமாறு கூற, அதில் சண்டை சூடுபிடித்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
கொந்தளிக்கும் பார்வதி
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் உள்ளே பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கின்றன. பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் முடிந்துள்ளது. அதிகமான போட்டியாளர்களால் பார்வதி நாமினேட் செய்யப்பட்டுள்ளார். மாஸ்க்கை எடுத்து உரிய பெட்டியில் வைக்கும் டாஸ்க் இரண்டாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதில் பார்வதி அவருடைய இடத்தில் அல்லாமல் வேறொரு இடத்தில் நின்றுக் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை சபரி அவருடைய இடத்தில் நிற்குமாறு வலியுறுத்தி கூற, அதற்கு பார்வதிக்கு கோபம் வந்து விடுகிறது.
“நா எங்க நின்றால் உங்களுக்கு என்ன? ..” என கோபத்துடன் கேட்க சண்டை முற்றிப்போகிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான சண்டை ஆரம்பித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |