இவ்வளவு பேர் நாமினேஷனா? திவாகரனை அசிங்கப்படுத்திய கம்ருதின்- எச்சரிக்கும் பார்வதி
பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிகமானவர்களாக நாமினேட் செய்யப்பட்ட பார்வதி, திவாகரனை அசிங்கப்படுத்தும் பொழுது கம்ருதினை எச்சரித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
எச்சரிக்கும் பார்வதி
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் உள்ளே பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கின்றன.
பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்துள்ளது. அதில் 14 போட்டியாளர்களால் விஜே பார்வதி நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் கொடுத்த டாஸ்க்கில் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகரன் அவருடைய மாஸ்க்கையே எடுத்து பெட்டிக்குள் வைத்திருக்கிறார் எனக் கூறும் பொழுது கம்ருதின் எச்சில் துப்பி அவரை அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனை அங்கிருந்த பார்வதி தட்டி கேட்கிறார். அதன் பின்னர் எப். ஜே அங்கிருக்கும்போட்டியாளர்களிடம் சண்டை போடும் பொழுது, தடுத்து நிறுத்திய சபரி, “சண்டை வேண்டாம், நீ நல்ல பெயருடன் இங்கிருந்து வெளியில் செல்ல வேண்டும்..” என அறிவுரை வழங்கி கட்டியணைக்கிறார்.
இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |