Bigg Boss 9: பார்வதியை பிரித்தெடுக்கும் விஜய் சேதுபதி.. ஹவுஸ்மேட்ஸ்க்கு என்னாச்சு?
கடந்த வாரங்களில் சக போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட பார்வதியை விஜய் சேதுபதி பிரித்தெடுத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
கடந்த வாரம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
பார்வதியை எதிராக திரும்பிய விஜய் சேதுபதி
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் உள்ளே பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கின்றன.
பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வாரம் என்பதால் வீட்டில் தெனாவட்டுடன் அழைந்துக் கொண்டிருந்த போட்டியாளர்களை விஜய் சேதுபதி வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார். பிக்பாஸ் வீட்டிலுள்ளவர்களை பார்வதி நடத்திய விதம் வெளியில் அதிகமான மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் என சக போட்டியாளர்கள் பார்வதி மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
கம்ருதினும் அப்படி தான் மற்ற போட்டியாளர்களிடம் நடந்து கொள்கிறார். அவரின் உண்மையான முகம் வேறு, அவர் ஷோக்காக சில விடயங்கள் செய்கிறார் என திவாகரனும் கூறுகிறார். வாட்டர்மிலன் ஸ்டார் என மக்களால் அவமதிக்கப்பட்ட திவாகரன் முதல் வாரத்தில் சேவ்வானது பிக்பாஸ் போட்டியாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |