நீதிமன்றத்தில் புதிய வழக்கு: விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ள மற்றொரு சர்ச்சை!
நடிகரும் தவெக தலைவருமான விஜய் சமர்ப்பித்த வேட்பு மனுவில் இடம்பெற்றுள்ள சொத்து விவரங்கள் குறித்து முரண்பாடுகள் இருப்பதாக கூறி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் திகதி மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில், 5க்கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர். மேலும், தேர்தலில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத வகையில், அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தலில், மாநிலத்தின் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக அதிகபட்சமாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. அது விஜயின் அரசியல் வருகையால் மாத்திரமே நடந்தேறியுள்ளதாகவும் ஒரு கருத்து கணிப்பு காணப்படுகின்றது.
ஆனால், அரசியலில் கால்பதித்தது முதல் விஜய்க்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய வண்ணமே இருக்கின்றது.

புதிய சர்ச்சை
தவெக தலைவர் விஜய் வேட்புமனுத்தாக்கல் செய்த மனுவில், தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலின் நம்பகத்தன்மை, அதன் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விளக்கம் தேவை என தற்போது புதிதான நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 32 வயதான வெங்கடேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடுகையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை அறிந்து கொள்வது ஒரு வாக்காளராக தனது உரிமை என்றும் வேட்பாளர்கள் முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டிய கடமை கொண்டவர்கள்.
குறிப்பாக ஃபார்ம் 26 இல் வழங்கப்படும் தகவல்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவற்றை மறைப்பது தவறாக குறிப்பிடுவது அல்லது தேர்தல் நடைமுறைக்கு எதிரானதாக கருதப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் விஜய் தன்னை வெளிப்படையானவராக காட்டிக் கொள்ளாவிட்டாலும் தனது வேட்பா மனுவில் குடும்பத்தினரும் தொடர்புடைய நிறுவனங்களும் பெரிய அளவில் கடன் வழங்கியதாக குறிப்பிட்டு இருப்பது பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து வருமானவரித்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனுதாரர் கோரிகை வைத்துள்ளார்.
மேலும் தனது மனைவி சங்கீதாவிற்கு ரூபாய் 12.6 கோடி கடன் வழங்கியதாக கூறியிருப்பது அண்மையில் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |