வீட்டுல துடைப்பத்தை இப்படி வைத்து தவறு செய்திடாதீங்க: பர்ஸ்ல பணமே இருக்காது! ஜாக்கிரதை
பொதுவாக வீட்டில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை வாஸ்து பார்க்க முடியும் என்பது பலருக்கும் தெரிந்த வியடம். வீட்டை பெருக்கி சுத்தமாக்கும் துடப்பத்தினை நாம் கையாளும் விதம் நம்மை பொருளாதார ரீதியான சிக்கலை ஏற்படுத்தும்.
வாஸ்து சாஸ்திரத்தில் இதற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதே வேளையில், சுத்தம் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே துடைப்பமும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதப்படுகிறது.
இவ்வாறு முக்கியத்துவமாக கருதப்படும் துடப்பத்தினை நாம் சரியாக கையாளாவிட்டால், பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இரவு நேரத்தில் வீட்டைப் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது நல்லதல்ல என்று கருதப்படுகிறது.
இது தவிர, வீட்டில் இருந்து ஒருவர் வெளியே சென்ற உடனேயே வீட்டை பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், அவர் சென்ற பிறது ஒரு மணிநேரம் காத்திருந்து பின் வீட்டை பெருக்க வேண்டும்.
லட்சுமி தேவியின் விருப்பமான பார்க்கப்படும், துடைப்பத்தின் மீது கால் வைத்தால், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி கோபப்படலாம். வாஸ்துப்படி, துடைப்பத்திற்கு மரியாதை செய்வது லட்சுமி தேவியை மகிழ்விக்கும். இதனுடன், அத்தகைய வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும்.
பெரும்பாலும் வீட்டை துடைப்பத்தால் சுத்தம் செய்த பின்னர், பலர் அதை அவசரமாக தலைகீழாக வைப்பார்கள். ஆனால் இப்படி வைப்பது வீட்டில் முரண்பாடு அதிகரிக்கும் வாய்ப்புக்களை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் டென்சனும் அதிகரிக்கும்.
எனவே எப்போதும் துடைப்பத்தை சரியான இடத்தில் நேராக வையுங்கள். இது தவிர துடைப்பத்தை நிற்க வைத்தால், வீட்டில் எதிர்மறையான விளைவை அதிகரிக்கும். எனவே எப்போதும் துடைப்பத்தை கால் படாத இடத்தில் படுக்க வையுங்கள்.
எப்போதும் வீட்டிற்கு வெளியே அல்லது மொட்டை மாடியில் விளக்குமாறு வைப்பதைத் தவிர்த்திடுங்கள். இவ்வாறு செய்வதால் வீட்டில் திருட்டு ஆபத்து அதிகம் ஏற்படும்.
வீட்டின் செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படும் துடைப்பத்தை, மறைத்து வைக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு வரும் யாரும் உங்கள் வீட்டில் உள்ள துடைப்பத்தைப் பார்ப்பது கெட்டதாக கருதப்படுகிறது.
உங்கள் வீட்டில் உள்ள குழந்தை திடீரென்று துடைப்பத்தால் வீட்டைப் பெருக்கினால், வீட்டிற்கு விருந்தினர்கள் வரப் போவதைக் குறிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில நல்ல செய்திகளையும் பெறலாம்.
பெரும்பாலான மக்கள் புதிய வீட்டிற்கு மாறும் போது, பழைய துடைப்பத்தையும் மீதமுள்ள பொருட்களையும் கொண்டு செல்வார்கள். ஆனால் அது நல்லதல்ல. ஆகவே புது வீட்டிற்கு சென்றால் பழைய துடப்பத்தை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். துடைப்பத்தை கனவில் பார்த்தால், அது நல்லதாக கருதப்படுகிறது.
