பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய போட்டியாளர் - காரணம் என்ன?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்களும் சுயநலத்துடன் தொடர்ந்து சண்டையுடன் விளையாடி வருகின்றனர்.
தொடர்ந்து டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. இறுதிக்கட்டம் வரை சென்றுள்ளதால் சுவாரசியத்தை கூட்ட பிக்பாஸ் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
சிம்புக்காகவே வார இறுதி நாட்களை மட்டுமே பல ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற கேள்விக்கு, எழுந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
அவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இரண்டும் முறை வெளியேறி உள்ளே வந்து வெளியேறி இருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.