ஒருவழியாக கோபியை திருமணம் செய்யும் பாக்கியா- குஷியில் ஈஸ்வரி, குடும்பத்தினர்
மீண்டும் பாக்கியாவை கோபி திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வந்தனர்.
.இனியாவின் அதிரடி
இந்த நிலையில் ராதிகாவை பிரிந்து அம்மா மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த கோபி இனியா விடயத்தில் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டார்.
அம்மா- அப்பாவின் நிலையை புரிந்து கொண்ட இனியா அவருடைய காதலை தியாகம் செய்து விட்டு நிம்மதியாக வேலைப் பார்த்து கொண்டிருக்கிறார்.
இனியா பிரச்சினையில் வீட்டை விட்டு சென்ற ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் தனியாக வீடு வாங்கி இருக்கிறார்கள். பாக்கியா எவ்வளவு அழைத்தும் ஈஸ்வரி அவருடைய வீட்டிற்கு செல்லவில்லை.
கோபியுடன் கைக்கோர்க்கும் பாக்கியா
இந்த கதை இன்னும் சில எபிசோட்களில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரவிருக்கிறது. கோபியுடன் என்ன நடந்தாலும் சேர மாட்டேன் என பாக்கியாவும் ஒரு முடிவுடன் இருக்கிறார்.
இப்படியொரு சமயத்தில் பாக்கியா, கோபியுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படமொன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “மீண்டும் கோபியுடன் சேர்ந்து விட்டீர்களா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |