கள்ளக்காதலா.. இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து- வக்காலத்து வாங்கிய கோபி- பாக்கியா
இனியாவின் வாழ்க்கைக்கு முதல் காதல் பிரச்சினையாக வந்துள்ளதால் பாக்கியா- கோபி மகளின் வாழ்க்கைக்காக தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில், பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில், தற்போது இனியாவை நித்தேஷுக்கு சுதாகர் வைத்து, இரண்டு ஹோட்டல்களையும் தன்வசப்படுத்தியிருக்கிறார் என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
கட்டுக்கதைகளை அடுக்கிச் செல்லும், சுதாகர் குடும்பத்தினருக்கு இனியா சரியான பாடம் கொடுப்பார் என எதிர்ப்பார்த்த வேளையில், இனியாவின் காதல் விவாகரம் கணவருக்கு தெரியவந்துள்ளது. இனியா பாக்கியாவை பார்ப்பதாக கூறி, கள்ளத்தனமாக காதலனை பார்க்கிறார் என ரித்தீஷ் பழி போடுகிறார்.
விவாகரத்தா?
இந்த நிலையில், இனியாவுக்கு நடக்கும் கொடுமைகளை தெரிந்து கொண்ட கோபி- பாக்கியா இருவரும் சுதாகரிடம் சென்று நடந்த விடயம் குறித்து விசாரிக்கிறார்கள்.
அப்போது கடுப்பான மாப்பிள்ளை,“ உங்கள் மகள் கள்ளத்தனமாக சென்று அவருடைய காதலரை பார்க்கிறார். அது எனக்கு தெரியும்..” என்கிறார். அதற்கு பாக்கியா, “ என்னுடைய மகள் அப்படியானவர் இல்லை. இது போன்று தவறாக பேச வேண்டாம்..” என்றார். நடக்கும் பிரச்சினைகளை பார்த்தால், இனியாவுக்கு விவாகரத்து நடந்து விடும் என சின்னத்திரை ரசிகர்கள் முனுமுனுக்கிறார்கள்.
மேலும் பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு பாக்கியா ராதிகா, செழியனுக்கு ஜெனி மாலினி, அமிர்தாவுக்கு கணேசன் எழில் இருந்தது போல் தற்போது இனியாவும் நித்தேஷை விட்டுவிட்டு ஆகாஷ் உடன் சேர வாய்ப்பு இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |