முடிவுக்கு வரும் சீரியல்.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய இனியா
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய இனியாவின் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.
இதற்கிடையில் இனியாவின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ரித்திஷை கொலைச் செய்து விட்டு, தற்போது பொலிஸாரிடம் சிக்காமல் மறைந்து இருக்கிறார்.
மகளை பணத்திற்காக திருமணம் செய்து வைத்த கோபி, பொலிஸாரிடம் சிக்கி அடிவாங்கிக் கொண்டிருக்கிறார். இப்படி சீரியல் சென்றுக் கொண்டிருக்கையில், இனியாவுக்கு ஆகாஷ்வுடன் இரண்டாவது திருமணம் நடத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மார்டன் உடையில் இனியா
இந்த நிலையில், சீரியலில் இப்படி இனியாவின் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் சென்றுக் கொண்டிருக்கையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இனியா காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ சீரியல் முடிந்ததும் மார்டனாக மாறி விட்டாரா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |