Tamilzha Tamizha: மகன்களுக்கு மாமியாராக மாறிய அம்மாக்கள்.... அரங்கத்தில் குமுறும் மகன்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட மகன்கள் மற்றும் அம்மாக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மகன்கள் மற்றும் அம்மாக்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் திருமணத்திற்கு முன்பு தனது மகன் வைத்த பாசத்தையும், தற்போது மகனின் மாற்றத்தையும் அரங்கத்தில் கூறி தாய்மார்கள் கொந்தளித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் மகன் பெற்ற அம்மாவை... தற்போது அம்மா எனக்கே மாமியாராக மாறிவிட்டார் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மற்றொருவர் தனது மகன் தான் கேட்ட ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கவில்லை என்று கண்கலங்கியுள்ளனர். மேலும் மகனுக்கு புளிசாதமும் எடுத்து வந்து அவருக்கு ஊட்டி விட்டு தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |