சீரியல் முடிந்த கையுடன் அடுத்த வேலையை பார்க்க கிளம்பிய இனியா- வைரல் புகைப்படம்
சீரியல் முடிந்த கையுடன் அடுத்த வேலையை பார்க்க சென்ற இனியா தற்போது என்ன செய்கிறார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.
இதற்கிடையில் இனியாவுக்கு ஆகாஷை இரண்டாவது திருமணம் செய்து வைக்க வீட்டிலுள்ளவர்கள் முடிவு செய்து, அதற்கான வேலைகள் சீரியலில் நடந்து கொண்டிருக்கிறது.
சீரியலின் இறுதிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தாலும், எபிசோட்களில் இறுதி காட்சிகள் இதுவரையில் வரவில்லை.
மார்டன் உடையில் இனியா
இந்த நிலையில், சீரியலில் இப்படி இனியாவின் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் சென்றுக் கொண்டிருக்கையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இனியா தன்னுடைய கனவு ஆடையில் சில புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ சீரியல் முடிந்ததும் மார்டனாக மாறி விட்டாரா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |