Baakiyalakshmi: கண்ணீருடன் இனியாவிற்கு பாக்கியா கூறிய அறிவுரை... கண்கலங்கும் பாச போராட்டம்
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் திருமணம் நடந்து முடிந்த நிலையில், அவரை மாமியார் வீட்டிற்கு அனுப்பும் போது பாக்கியா பல அறிவுரைகளைக் கூறியதுடன், கண்கலங்கி அழுதுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாகும்.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில், இவரது ஹோட்டலை இனியாவை வைத்து சுதாகர் அபகரித்துள்ளார்.
ஆம் இனியாவை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து இதன் மூலம் பாக்கியாவின் ஹோட்டலை தனது பெயருக்கு மாற்றியுள்ளார் சுதாகர்.
இனியாவை அவரது மாமியார் வீட்டிற்கு அனுப்பும் போது, பாக்கியா தன்னைப் போன்று இருந்துவிடக்கூடாது என்று இனியாவிற்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |