நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா... ரசிகர்கள் ஷாக்!
நடிகர் அர்ஜுன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த 'சர்வைவர்' நிகழ்ச்சியின் மூலம் டிவி தொகுப்பாளராகவும் நடிகர் அர்ஜூன் அவதாரம் எடுத்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார் .
அதில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும். முகக்கவசம் அணிய மறந்து விட வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.