அன்று 14 வயதில் குழந்தை திருமணம்! இன்று 35 வயதில் ஐபிஎஸ்... யார் இந்த அம்பிகா?
இளம் வயதில் திருமணம் செய்து இன்று 35 வயதில் ஐ.பி.எஸ் ஆகி சாதித்துள்ள அம்பிகா பெண்களின் தன்னம்பிக்கைக்கு ஒரு உதாராணமாக வருகின்றார்.
வடக்கு மும்பையின் தற்போதைய துணை காவல்துறை ஆணையராக இருக்கும் இவரின் கடந்த கால கதை ஆயிரக்கணக்கான பெண்களுக்கு உதாரணமாக இருக்கின்றது.
இன்று பெண்குழந்தைகள் பிறந்துவிட்டாலே, உடனே அவர்களின் திருமணத்தினைக் குறித்து தான் பெற்றோர்களுக்கு சிந்தனை செல்லும். தற்போது அவ்வாறு சிறுவயதில் திருமணம் செய்துகொண்டு தற்போது சாதனை செய்த பெண்ணைக் குறித்து தான் பார்க்க போகிறோம்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும், 14 வயதே ஆன அம்பிகாவுக்கும் திருமணம் நடந்த நிலையில், தற்போது 18 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
அம்பிகாவின் கணவர் காவல்துறையில் காண்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்ததால், காவலர்களுக்கான அணிவகுப்பு நிகழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட முதல் தர பட்டத்தை அம்பிகாவிடம் பகிர்ந்துகொண்டதையடுத்து அவருக்கும் காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் வெறும் 10ம் வகுப்பு மட்டுமே பத்திருந்த அம்பிகாவிற்கு கனவை நிறைவேற்ற கணவர் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துள்ளார்.
பின்னர், ஐ.பி.எஸ். பயிற்சிக்காக சென்னைக்கு சென்று படிப்பதாக கேட்ட அம்பிகாவுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அம்பிகாவின் கணவர்.
மூன்று முறை ஐ.பி.எஸ். தேர்வில் அம்பிகா தோல்வியை தழுவியதால், கணவர் அவரை வீட்டிற்கு வரக்கோரி அறிவுறுத்தியுள்ளார்.
பின்பு கணவரிடம் பொறுமையாக அனைத்தையும் கேட்டுக்கொண்ட அபிராமி, ஒரு ஆண்டுகள் மட்டும் அவகாசம் கேட்டதோடு, அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை என்றால், ஆசிரியராகவாவது பணிபுரிந்து கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.
4வது முறை மேற்கொண்ட முயற்சியில் அம்பிகாவுக்கு ஐ.பி.எஸ். நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. 2008ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றியை பெற்ற பின்னர் பயிற்சிக்கு உட்பட்ட பிறகு வடக்கு மும்பை மாவட்டத்தின் காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது சிறந்த போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து நாட்டுக்கும் வீட்டுகும் பெருமை சேர்த்து வருகிறார் அம்பிகா.
குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சமூகத்தையும், பெற்றோரையும் குறை கூறாமல் தன்னுடைய இலக்கை அடைவதற்கு அயராது உழைத்திருக்கிறார் அம்பிகா காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற அவரது நம்பிக்கையை தளர விடாமல் இருந்ததால் இன்று ஐ.பி.எஸ் ஆகியுள்ளார்.
குழந்தை பருவத்தில் திருமணம் செய்திருந்தாலும், அதையே நினைத்து வருந்தாமல், எவ்வித மனக் குமுறல்களும் இல்லாமல் தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை இலக்காக கொண்டால் எவராலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கும், தற்போது சமூகத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வரும் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் அம்பிகா.