உடலில் அற்புத மாற்றங்களை செய்யும் எலுமிச்சை! தினமும் ஒரு டம்ளர் இப்படி குடிங்க
பொதுவாக எல்லா காலங்களிலும் சாதாரணமான விலையில் பெற்றுக்கொள்ள கூடிய பழங்களின் பட்டியலில் எலுமிச்சை முக்கிய இடம் வகிக்கின்றது. பார்ப்பதற்கு சிறிய பழமாக தோன்றினாலும் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும்,ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது.
எலுமிச்சை பழத்தை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் அருமருந்து என்றால் மிகையாகாது.

காலையில் எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை தண்ணீரின் அற்புத நன்மைகள்
எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக ஹெஸ்பெரிடின் மற்றும் டையோஸ்மின் போன்ற ஃபிளாவனாய்டுகள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் வீக்கத்தை குறைக்க உதவுவதுடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு வைட்டமின் சி அதிகமாக கிடைக்கின்றது.அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்குவதுடன் நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருப்பதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தைச் கட்டுப்படுத்தி சீராக பராமரிப்பதற்கும் உதவுகின்றது.

இது சரும ஆரோக்கியத்தை ஆதரிப்பதாகவும் சில சான்றுகள் காணப்படுகின்றது.ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்திற்கு வைட்டமின் C மிகவும் இன்றியமையாதது. எலுமிச்சையில் இந்தச் சத்து அதிக அளவில் உள்ளதால், இது சருமத்தைச் என்றும் இளமை பெலிவுடன் வைத்திருக்க துணைப்புரிகின்றர்து.
எலுமிச்சை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதால், வயதான தோற்றம் ஏற்படுவதை தாமதமாக்குவதுடன் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுவதுடன், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் துணைப்புரிகின்றது.

உடல் எடையை குழறைக்க வேண்டும் எனவும், தொங்கும் தொப்பபைக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் போராடி வருபவர்கள் ,காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைசாறு கலந்து குடிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது செரிமான ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கின்றது.

மேலும் சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து சிறுசீரக கல் உருவாவதையும் தடுக்க பெரிதும் துணைப்புரிவதுடன் சீறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.எலுமிச்சை குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் சீராகப் பராமரிக்க உதவுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |