இரண்டு விதமான தோற்றத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்... குழப்பதில் ரசிகர்கள்
நடிகை சமந்தா ட்ரெண்டிங் உடையில் ஆபரணங்கள் அணிந்தும் அதனை நீக்கியும் இரண்டு விதமான தோற்றங்களில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடத்தில் பிரிந்தார்கள்.
பின் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார்.
சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற செயல்களில் இறங்கினார். நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.
இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்க்த்தில் இரண்டு விதமான தோற்றத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
அதில் பாம்பு உருவங்களில் செய்யப்பட்ட ஆபரங்களை அணிந்தும் பின்னர் அதனை நீக்கியும் இரு விதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நாக சைதன்யாவை பிரதிபலிக்கும் வகையில் திருமணத்தின் பின்னர் சமந்தா அவ்வகை ஆபரணங்களை அதிகம் அணிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |