நடிகை ஓவியா வெளியிட்ட சர்ச்சை பதிவு... முதல்வர் விஜய்யின் மேனேஜர் குறித்து கூறியது என்ன?
நடிகை ஓவியா விஜய்யின் மேனேஜர் குறித்து பதிவிட்டு பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஓவியா
தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை மலையாள நடிகை ஆவார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார்.
ஓவியாவின் உண்மையான குணத்தை அறிந்த ரசிகர்கள் ஓவியா ஆர்மி என்று ஆர்மி அமைக்கும் அளவிற்கு அவர் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஜுலி ஓவியா இடையே கடும் சண்டை நிலவி வந்ததுடன், ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஓவியா சென்றார்.
இந்நிலையில் ஓவியா நேற்று தனது இன்ஸ்டாகிரம் தளத்தில் முதலமைச்சர் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு
நடிகை ஓவியா நேற்று அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் முன்னாள் நடிகரும், இந்நாள் முதல்வருமான விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் குறித்து அதிரடிப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “ரூட் மாபியா அம்பலப்படுத்தபட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் நடத்தி வரும் நிறுவனத்தின் பெயர் ரூட். விஜய், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, சமந்தா, கல்யாணி பிரியதர்ஷன், துஷாரா விஜயன், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, வினோத், நடிகர்கள் கதிர், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இந்த ரூட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் முக்கிய சினிமா பிரபலங்கள்.

இதற்கு முன்பு நடிகை பிரியங்கா மோகன் இந்நிறுவனத்தின் கீழிருந்து விலகிய பிறகு அவர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக 'டிரோல்' செய்யப்பட்டதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
இந்நிலையில் நடிகை ஓவியா தற்போது இந்நிறுவனம் பற்றி வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம்தான் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதைக் கவனித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். அவர்களது கட்டுப்பாட்டில் பல இன்புளூயன்சர்கள், யு டியூப் பிரபலங்கள் இருக்கிறார்களாம்.
நடிகை ஓவியாவும், ஜெகதீஷும் சில காலம் ஒன்றாக 'லிவிங் டு கெதர்' ஆக இருந்ததாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
YOU MAY LIKE THIS VIDEO
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |