கருப்பு திரைப்படம் இன்று வெளியாகுமா? அழுதபடி காணொளி வெளியிட்ட பாலாஜி
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யபட்டுள்ளது. இதற்கு பாலாஜி அழுதுகொண்டே வெளியிட்ட காணொளி வைரலாகி வருகின்றது.

கருப்பு திரைப்படம்
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் வெளியீட்டு நாளிலேயே சர்ச்சையில் சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (மே 14) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் வெளியான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட கால தாமதங்களுக்கு பிறகு உலகம் முழுவதும் இன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
மேலும் முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு ரசிகர்கள் உற்சாகமாக முன்பதிவுகளை செய்திருந்தனர்.
பல திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையும் வேகமாக நடந்தது. ஆனால் அதிகாலை நேரத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு"தவிர்க்க முடியாத காரணங்களால் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன" என பதிவிட்டுள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபு வெளியிட்ட பதிவின் படி பார்த்தால் படம் முழுமையாக வெளியாகுமா அல்லது மீண்டும் தாமதமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
இதற்கு இயக்குநர் பாலாஜி தற்போது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அழுதுகொண்டே காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பல விடயங்களை பேசி உள்ளார். மேலும் இன்னைக்கு சாயிங்காலம் 6 மணிக்கு இந்த பிரச்சனையெல்லாம் முடிந்து படம் ரிலீஸ் ஆகும்னு நான் எதிர்பார்க்கிறேன் என அப்பேட்டும் கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |