மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல மாடல் மற்றும் நடிகையாக வலம் வந்த பிதிஷா டி மஜும்தார்(21) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமான பல்லவி டே(25) சமீபத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? அலட்சியம் வேண்டாம் ஆபத்து
நடிகை மஞ்சஷா நியோகி
மேற்கு வங்கத்தில் பிரபல மாடல் அழகியாகவும், நடிகையாகவும் இருப்பவர் பிதிஷா டி மஜூம்தார்(21). இவர் கல்கத்தாவில் டம் டம் பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பிதிஷா டி மஜூம்தார் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்ற நிலையில், தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே நடிகை பிதிஷா அனுபாப் பேரா என்ற நபரை காதலித்து வந்துள்ளார். அவரின் நடவடிக்கை மாறுபாட்டால் சமீபகாலமாக பிதிஷா மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் காதலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இச்சம்பவத்தில் பிதிஷா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும், அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
ஷாலினியின் மகளா இது? தோலுக்கு மேல் வளர்ந்து ஹீரோயின் போல ஜொலிக்கும் அரிய புகைப்படம்!