நாடோடிகள் பட அபிநயாவின் வருங்கால கணவர் யார் தெரியுமா? கூடிய விரைவில் திருமணம்
மாற்றுதிறனாளியாக சினிமாவில் சாதித்து வரும் அபிநயாவின் வருங்கால கணவரின் புகைப்படம் மற்றும் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை அபிநயா
நடிகர் சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான “நாடோடிகள்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை அபிநயா.
இவர், ஒரு மாற்றுதிறனாளியாக இருந்தாலும், தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், சூர்யாவின் 7ஆம் அறிவு, ஈசன், ஜீனியஸ், வீரம், தனி ஒருவன், குற்றம் 23, சீதா ராமம், மார்க் ஆண்டனி, மலையாளத்தில் சமீபத்தில் வெளியான பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில், நடிகர் விஷால் உடன் அபிநயாவுக்கு காதல் என்றும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக திடீரென வதந்திகள் கிளம்பியது.
இதற்கு அபிநயா தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்திருந்தார். அத்துடன் அவர் என்னுடைய நண்பர் என்றும், அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும் கூறியிருந்தார்.
அப்போது பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தான் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறியிருந்தார்.
திருமணம் எப்போது?
இந்த நிலையில், நடிகை அபிநயா “சன்னி வர்மா” என்பவரை காதலித்து கடந்த மார்ச் 9ம் தேதி அவருடன் நிச்சயம் செய்து கொண்டார்.
இதன் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. அத்துடன் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
பல வருடங்களாக அபிநயா இவரைத்தான் காதலித்து வருகிறார் என்றும் இந்த மாதம் நிச்சயம் ஆன நிலையில், கூடிய விரைவில் திருமண தேதியை அபிநயா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |