இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபியை உருவாக்கிய நடிகர் ஜெமினி கணேசனின் மகள்... தற்போதைய நிலை என்ன?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தவரின் மகள் ஒருவர் மருத்துவதுறையில் பெரும் சாதனைகளை செய்துள்ளார்.
நடிகர் ஜெமினி கணேசனின் மகள் தான் கமலா, இவர் தற்போது மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இதனால் மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார்.

இவர் பள்ளி படிப்பை சென்னையில் முடித்துவிட்டு மருத்துவ படிப்பிற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள கஸ்தூரிபா மருத்துவ கல்லூரிக்கு சென்று டாக்டர் படிப்பை படித்தார்.
பின்னர் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேல் படிப்பை பயின்று மருத்துவராக பணியாற்ற துவங்கினார்.
மருத்துவத்தில் இவர் தேர்வு செய்த துறை மகப்பேறு மருத்துவதுறை அதில் இவர் 1990ம் ஆண்டில் செய்த சாதனை தான் மருத்துவ உலகையே இவர் திரும்பிபார்க்க வைத்தது.
இவர் 1990ம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் டெஸ்ட்டியூப் பேபியை வெற்றிகரமாக உருவாக்கி காட்டினார்.
தென்னிந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபியாக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். நீண்டகாலமாக குழந்தையில்லாமல் கஷ்டப்பட்டுவந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியத்தை சாத்தியமாக்கினார்.

இதன் பின்பு தான் டெஸ்ட் டியூப் பேபி குறித்த விழிப்புணர்வே மக்கள் மத்தியில் அதிகம் எழ துவங்கியது.
தென்னிந்தியாவின் முதல் டெஸ்ட்டியூப் பேபியை பெற்றெடுத்த தம்பதியினர் இவருக்கு தங்கள் நன்றியை காட்டும் விதமாக அந்த குழந்தைக்கும் கமலா என்று இவர் பெயரையே வைத்தனர். தற்போது கமலாவிற்கு திருமணமாகி அவருக்கும் குழந்தை பிறந்துவிட்டது.
இவர் மகப்பேறு மருத்துவம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய Wonder of Motherhood, தாயாக நானிருப்பேன், மன அமைதிக்கு உதவும் ஆன்மீகம் ஆகிய புத்தகங்கள் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றன.

இவர் 1989ம் ஆண்டே டெஸ்ட் டியூப் குழந்தைக்கான ஆய்வு மையத்தை உருவாக்கினார். இது மட்டுமல்ல இந்தியாவின் முதல் வாடகைத்தாய் குழந்தையை உருவாக்கியதும் இவர் தான். 2001ம் ஆண்டு கருத்தரிக்க முடியாத நிலையிலிருந்த பெண்ணிற்கு சரோகேட்டரி முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்க சிகிச்சை அளித்தார். இது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நடந்த முதல் சம்பவமாகும்.