இந்த இரண்டு ராசிகள் இணைந்தல் திருமண வாழ்க்கை செம மாஸ் தான்! ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரு முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது.
அடிப்படையில் மனிதர்கள் தங்களின் வேலைகள் அனைத்தையும் தனியாக செய்துக்கொள்ளும் அளவுக்கு வலிமையுடையவர்களாக இருந்தாலும், உடல், உள ரீதியான தேவைகளை நிறைவு செய்வதில் வாழ்க்கை துணையின் பங்கு இன்றியமையாதது.

அப்படி நாம்மோடு வாழ்க்கை முழுவதும் நமது சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்ளப்போகும் ஒரு நபர் நமது விருப்பங்களையும், உணர்வுகளையும் நன்கு புரிந்தவராக இருந்தால் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
அந்தவகையில் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் எந்த இரண்டு ராசியினர் திருமண பந்தத்தில் இணைவது இவர்களின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம் மற்றும் தனுசு

நெருப்பு ராசிகளான மேஷம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு இடையில் இயல்பாகவே ஒரு காந்த ஆற்றல் இருக்கும். இவர்கள் சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
எனவே இந்த இரண்டு ராசியினர் ஒன்றாக இணைந்தால் அவர்களுக்கு இடையில், புரிதல் என்பது சிறப்பாக இருக்கும்.இருவருமே தன்னிச்சையாக செயல்பட விரும்புவதால், ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த நினைக்க மாட்டார்கள்.
இவர்களின் திருமண வாழ்வில் நிபந்தனைகள் அற்ற உண்மையான காதல் இருக்கும். இந்த ராசிகள் துடிப்பாக ஜோடிகளாக மற்றவர்கள் பொறாமைபடும் வகையில், வாழ்ந்து காட்டுவார்கள். இறுதிவரை ஒருவருக்கு இன்னொருவர் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
ரிஷபம் மற்றும் கடகம்

பூமி ராசியான ரிஷபமும், நீர் ராசியான கடகமும் காதல் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இவருக்குமே எவ்வாறு காதல் செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.
இவர்கள் இருவருதே காதலுக்காக ஏங்கும் கொண்டவர்களாகவும், காதலில் அதிக உண்மையையும், நேர்மையையும் கொண்டவர்களாக இருப்பதால், இந்த இரண்டு ராசிகள் திருமணம் செய்தால், வாழ்வின் இறுதிவரை காதலுக்கு பஞ்சமே இருக்காது.
இவர்கள் திருமணம் மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர்களாகவும், உறவுகள் மீது அன்னறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எனவே அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
மிதுனம் மற்றும் துலாம்

காற்று ராசிகளான மிதுனம் மற்றும் துலாம் ராசியினர் யதார்த்த்தை நன்கு அறிந்தவர்களாகவும், உணர்வுகளை விடவும் அறிவுசார்ந்த சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்களுக்கிடையே இருக்கும் இந்த முதிர்ச்சி நிலை திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும், பிரச்சினைகளை எளிதில் தீர்க்கவும் பெரிதும் துணைப்புரியும். இவர்கள் இணைந்தால் திருமண வாழ்க்கையை சரியாக கொண்டு நடத்துவார்கள்.
இந்த இரண்டு ராசிக்குமே உணர்வு பூர்வமாக சிந்திக்கவும் தெரியும், யாதார்த்தத்தை புரிந்துக்கொள்ளவும் தெரியும் என்பதால் இவர்களின் திருமண வாழ்வில் பிரிவுக்கு இடமே இருக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |