வீட்டில் பார்த்த மாப்பிள்ளையே ஓகே சொன்ன நடிகை யாஷிகா - மாப்பிள்ளை யார்?
நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானார்.
14 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்துள்ளார்.
குறிப்பாக, அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திலும் நடித்திருந்தார்.
மகன் பிறந்த சில நாட்களில் ஆல்யாவின் கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
திருமணத்தை அறிவித்த யாஷிகா
இந்நிலையில், உடல் நிலை சரியாகி வந்த யாஷிகா அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் மீண்டும் பதிவிட ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில்,தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாஷிகா வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று வைரலாகி வருகிறது.
அதன்படி,“எனக்கு திருமணம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வழங்கி விட்டார்கள்.

இது செட்டில் ஆக வேண்டிய நேரம். நான் சினிமாவை காதலிக்கிறேன். என்ன ஆனாலும் உங்களை எண்டெர்டெயின் செய்வேன்.
இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். நமக்கு லவ் எல்லாம் செட் ஆகாது எனத் தெரிவித்து அதிர்ச்சியை தந்துள்ளார்.
ஆனால், மாப்பிள்ளை யார், எப்போது திருமணம் என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஏப்ரல் 1 என்பதால் prank செய்திருப்பரோ என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.