ஆர்க்டிக் பகுதியில் மழைபெய்தால்.. ஒட்டுமொத்த உலகத்திற்கும் என்னவாகும் தெரியுமா?
ஆர்க்டிக் பகுதியில் பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டாலும், மழைப்பொழிவால் ஒட்டுமொத்த உலகத்துக்குமே பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆர்க்டிக் பகுதியில் வெப்பத்தால், பனிப்பாறைகள் உருகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக பார்க்கப்பட்டு வந்தது.
இதனிடையில் 21-ம் நூற்றாண்டில், ஆர்க்டிக் பகுதி பனி நிறைந்த பகுதியிலிருந்து, மழை நிறைந்த பகுதியாக மாறி, தண்ணீர் சூழற்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த காலக்கட்டம் நிச்சயமானது இல்லை.
இதுகுறித்த ஆய்வாளர்களின் கணிப்பில் ஆர்க்டிக் கடல், சைபீரியா உள்ளிட்ட பகுதிகள், 2090-க்கு பதிலாக முன்கூட்டியே 2070 லேயே மழை அதிகம் நிறைந்த பகுதியாக மாறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்க்டிக் பகுதியில் நடைபெறும் மிகத் தீவிரமான தண்ணீர் சுழற்சி முறை, நிலப்பரப்பு, கடல் பரப்பின் சுற்றுச்சூழல் மீது மிகப்பெரிய விளைவை உருவாக்கும். வெப்பமயமாதல் மற்றும் மழைப்பொழிவு போன்றவை ஆர்க்டிக் பகுதியில் மிகச் சிறந்த சூழலை ஏற்படுத்தும், அது சுற்றுச்சூழலுக்கும் சிறப்பாக இருக்கும்.
பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக, ஆர்க்டிக் பகுதியில் வசிக்கும் விலங்குகளும், தாவரங்களும் கூட, அந்த தட்பவெப்பநிலைக்கு ஏற்ற வகையில் வாழப் பழகிவிட்டன. அவைகளின் மிக எளிமையான உணவு வழக்கம், இந்த மாற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படையுமாம்.
இதனைத்தொடர்ந்து வெப்பமயமான பகுதிகளில், கொசு போன்ற பூச்சியினங்களின் முட்டைகள் விரைவாகவே குஞ்சு பொரித்துவிடும், அதாவது, இதனை உண்டு வாழும் மீன்களின் குஞ்சுகள் பொரிப்பதற்கு முன்பே.
ஆனால், அதிக மழைப்பொழிவு இருக்கும் பகுதிகளில் அதிக சத்துகள், மழைநீர் வழியாக ஆற்றில் கலந்துவிடும், இதனால், உணவுச் சங்கிலிக்கு அடிப்படையான தண்ணீரிலிருக்கும் சிறு தாவரங்கள் மிகுந்த பயன்பெறும்.
ஆர்க்டிக் பகுதிக்காக, உலகளாவிய சராசரி வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸ் என்பதன் முக்கியத்துவத்தை ஆய்வில் காட்டுகிறது.
இதனால், ஆர்க்டிக் பகுதியின் மீது உலக சுற்றுச்சூழல் நிபுணர்களின் கவனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதையும், உலக வெப்பமயமாதல் தொடர்பாக விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்கும் மேலும் அழுத்தம் கொடுப்பதாக இந்த ஆய்வறிக்கை அமைந்துள்ளது.