60 அடி உயர தென்னை மரத்தில் தலைகீழாக தொங்கிய தொழிலாளி! அதன் பின்பு நடந்த சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த புதுப்பேட்டை சேர்ந்தவர் அபி மன்னன். இவர், அருகே அக்ராகரம் நாட்டான்வட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில் தென்னை மரங்களை குத்தகைக்கு எடுத்து உள்ளார்.
இந்த நிலையில் தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறிப்பதற்காக அந்தியூர் பகுதியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி ராமன் என்பவரை அழைத்து வந்தனர். அப்போது அவர் 4 மரங்களில் தேங்காய் பறித்து விட்டு 60 அடி உயரமுள்ள 5-வது தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க காலில் அணியும் மெட்டு மற்றும் இடுப்புக்கு பெல்ட் அணிந்துகொண்டு மரத்தில் ஏறியுள்ளார்.
இதனிடையே, தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறிக்க புதுப்பேட்டை அருகே அத்தியூர் பகுதியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி ராமன் (65) என்பவரை அழைத்து வந்தனர்.
60 அடி உயரத்தில் ஏறும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டு அதே மரத்தில் மயங்கிய நிலையில் தொங்கியுள்ளார். மேலும், மரம் ஏறுவதற்காக அவரது இடுப்பில் கட்டப்பட்ட பெல்ட் அவரை இறுக்கமாக பிடித்துக்கொண்டதால் அவர் மரத்தில் இருந்து கீழே விழாமல் உயிர் தப்பினார்.
இருப்பினும், 60 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் தொழிலாளி தொங்கிய நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடி யாக திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சுமார் 1 மணி நேரம் தென்னை மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சுமார் ½ மணி நேரம் போராடி ராமனை பத்திரமாக மீட்டனர். அதன் பின்னர் அவர் சிகிச்சைக்காக புதுப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.