தூங்கும்போது ஏன் மொபைல் போன் வைத்திருக்கக் கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
இன்றைய தொழில் நுட்ப உலகில் சமூக ஊடகங்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருமே மொபைல் போனுடன் நேரம் செலவிடுவது அதிகரித்துவிட்டது.
தற்காலத்தில் மொபைல் போன் தவிர்க்க முடியாத ஒரு சாதனமான உருவெடுத்துவிட்டது. அந்தளவுக்கு அதன் முகியத்துவம் அதிகரித்துவிட்டது. செல்போன் இல்லாமல் முழுமையாக ஒரு நாளை கூட கடத்த முடியாது என்றால் மிகையாகாது.
9QUUO
மொபைல் போன் பாவனை தற்காலத்தில் அவசியமானது என்றாலும், அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது பல்வேறு வகையிலும் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக இரவில் படுக்கையில் வைத்து மொபைல் போன் பாவிப்பதால் ஏற்படும் முக்கியமான ஆரோக்கிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக இந்த பதிவில் பார்களாம்.
பாதக விளைவுகள்
உங்கள் தொலைபேசித் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியில் தலையிடக்கூடும். இது தூங்குவதை கடினமாக்கி, உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும், இதனால் பகல்நேரத்தில் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாதளவுக்கு சோர்வு ஏற்படலாம்.
படுக்கையில் போன் வைத்திருப்பதால், நீங்கள் தூங்க முயன்றாலும், அறிவிப்புகள் அல்லது அழைப்புகளிலிருந்து வரும் ஒலிகள் உங்களை எழுப்பி, உங்கள் தூக்க சுழற்சியை குறுக்கிட்டு, ஒட்டுமொத்த தூக்க கால அளவைக்யும் குறைக்கும்.
முக்கியமாக மொபைல் போன்களால் வெளிப்படும் கதிர்வீச்சின் அளவுகள் பொதுவாகக் குறைவாகக் கருதப்பட்டாலும், வெளிப்பாட்டின் நீண்டகால விளைவுகள் பாரியளவில் உடல் ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.
போதுமான தூக்கம் இல்லை என்றால் இன்சுலின் சுரப்பதில் நீண்ட கால பாதிப்பை ஏற்படும். அதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். ஏற்கனவே நீரிழிவு இருப்பவர்களின் ஆரோக்கியத்தை மேலும் மோசமடைய செய்யும்.
மொபைலை இரவில் நேரத்தில் தள்ளிவைத்தால் தரமான தூக்கம் கிடைக்கும். இது உடலின் குளூகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். மேலும் டைப் 2 நீரிழிவு நோய் போன்ற வளர்சிதை மாற்றம் நோய்களை தவிர்க்கலாம்.
இரவில் போனை அதிகம் பயன்படுத்துவதால், உயர் இரத்த அழுத்தம் தொடங்கி இதயநோய் வரை பல உடல்நிலை பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக அமையும். மேலும் இது மன அழுத்தத்தை அதிகரிக்கும் என ஆய்வுத்தகல்கள் குறிப்பிடுகின்றன.
இரவில் நீண்ட நேரம் மொபலை பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் வலி, கண் வறட்சி, தலைவலி போன்ற பிரச்னைகள் வரலாம். இதனால் இரவில் மொபைலை தவிர்த்து கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.

personality: உங்களுக்கு சிவப்பு நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் இருக்கான்னு செக் பண்ணுங்க
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |