பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது? மீறி குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
அன்றாட உணவு பழக்க வழக்கங்களுடன் பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
அவற்றுள் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.
தொடர்ந்து பழங்கள் சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற அபாயங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அதோடு நம்முடைய உடல் அமைப்பும் பல்வேறு வகையான செரிமான நொதிகளை உற்பத்தி செய்கின்றன. அதேசமயம் பழங்கள் சாப்பிடும்போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
குறிப்பாக பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படி குடிப்பதால் என்ன மாதிரியான பிரச்சினைகள் உண்டாகும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது?
நம்முடைய வயிற்றில் இருந்து உற்பத்தியாகும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு பொருட்கள் எளிதாக செரிமானம் ஆவதற்கு வழிவகை செய்யும்.
சாதாரணமாக வயிற்றில் உள்ள அமிலத்தின் பி.எச். அளவு 1.5 முதல் 3.5 வரை இருக்கும்.
ஆனால் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால், அது அந்த அமிலத்தின் செயல்திறனை குறைத்துவிடும். அதனால் செரிமானத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடும்.
வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம். அவற்றை சாப்பிட்டதும் செரிமானம் ஆவதற்கு குடல் இயக்கங்கள் மெதுவாக நடைபெறும்.
அந்த நேரத்தில் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் செயல்பாடு அதிகரிக்கும். அதிக நீரை ஈடு செய்வதற்காக வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக பழங்களில் சர்க்கரையும் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்கவும் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்தவும் தான் பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது.
அதனால் பொதுவாகவே பழங்கள் சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரம் கழித்து தண்ணீர் குடி்ப்பது நல்லது.