இரண்டு மாதங்கள் இருட்டில் மூழ்கும் உலகின் அதிசய நகரம்- எங்குள்ளது தெரியுமா?
வருடத்தில் 64 நாட்கள் முழுவதும் இருளால் சூழப்பட்டிருக்கும் நகரம் எங்குள்ளது என்ற விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இருள் சூழ்ந்த நகரம்
பொதுவாக உலகின் பெரும்பகுதிகளில் இரவு, பகல் மாறி மாறி தோன்றும். ஆனால் உலக நாடுகளில் ஒரு நகரத்தில் மாத்திரம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு சூரியனை பார்க்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நகரமானது, அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உட்கியாக்விக்(utqiagvik)கண்டறியப்பட்டுள்ளது. இங்கு சுமாராக 5,000 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் நவம்பர் 18 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், சூரிய உதயம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஆர்க்டிக் பெருங்கடலின் கரையில் இருந்து 300 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் பூமியின் 71.17 வட அட்சரேகையில் அமைந்துள்ளது.
இதன் காரணமாக தற்போது சூரியன், நகரின் அடிவானத்திற்கு கீழ் இருக்கும். இதனையே "துருவ இரவு" (polar night) என அழைக்கிறார்கள். சூரியன் வரவில்லை என்றால் முழு நகரமும் இருள் சூழ்ந்து விடாது, மாறாக மங்கலான வெளிச்சம் இருக்கும். ஆனாலும் சூரியன் இல்லாத காரணத்தினால் கடுமையான குளிர் இருக்கும்.
3 மாதம் பகல் இருக்குமாம்..
இந்த நிலையில், மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை இரவே இல்லாமல் 3 மாதங்களும் பகல் மாத்திரமே இருக்கும். இந்த சமயத்தை “நள்ளிரவு சூரியன்” (Midnight Sun) என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இந்த காலப்பகுதியில் சூரியன் 24 மணித்தியாலமும் அடிவானத்திற்கு மேல் இருப்பதால் இரவிலும் வெளிச்சம் இருக்கும்.

இந்த நிகழ்வின் போது பூமி அதன் அச்சில் இருந்து சுமார் 23.5 டிகிரி சாய்ந்து காணப்படும். ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற மாற்றங்கள் ஏற்படும் பொழுது அங்கு வாழும் மக்கள், மின் விளக்கு உதவியுடன் இருக்க பழகிக் கொண்டுள்ளனர்.
இந்த மாற்றங்கள் ஏற்படும் பொழுது சுற்றுலா பயணிகளின் வாகனங்களின் வெளிச்சத்தை பார்ப்பதற்காகவே விரைகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |