ஒரு போன் கால் போதுமானது - புரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்காதது குறித்து நயன்தாரா ஓபன் டாக்!
nayanthara explanation : திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் பெரும்பாலும் பங்கேற்காமல் இருப்பது குறித்து நடிகை நயன்தாரா வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளார். குறித்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றது.
புரமோஷன் நிகழ்வுகளில் நயன்தாரா
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நயன்தாரா, திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் ஏன் அதிகம் பங்கேற்பதில்லை என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்டார்.
“படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை.ஆனால், அது எனக்கு அவ்வளவு சரியாக வராது என்பதால், அதிலிருந்து சற்று விலகியே இருக்கிறேன்.

இருப்பினும், ‘டாக்ஸிக்’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதற்கு முக்கிய காரணம் யஷ். இந்த நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக யஷ் செய்த ஒரு போன் கால் மட்டுமே போதுமானதாக இருந்தது” என்று நயன்தாரா கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய யஷ், நயன்தாராவுக்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டினார். “நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார். அவரை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். அவருக்கான ரசிகர்கள் கூட்டமும், மார்க்கெட்டும் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்தப் படத்தில் நடிக்கும்போது அவருக்கு தேதிகள் தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தன. ஆனால், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அதை அவர் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தனது சிறந்த நடிப்பை அவர் வழங்கியிருக்கிறார்.
இந்தப் படத்துக்கு நயன்தாரா ஒரு மிகப்பெரிய பலம். தனது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்” என்றார். மேலும், தானும் நயன்தாராவைப் போலவே புரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை என்று குறிப்பிட்ட யஷ், “புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நிகழ்வுகளுக்கு வந்தால் பேச வேண்டும்.
என்ன பேசுவது? நாம் ஏற்கனவே ரசிகர்களிடம் நிறைய அன்பைப் பெற்றிருக்கிறோம். சில நேரங்களில் நாம் அதிகமாகவும் பேசிவிடுகிறோம். ஆனால், இன்று நயன்தாரா இந்த நிகழ்வுக்காக வந்திருக்கிறார். அதுவும் தனது உள்ளத்திலிருந்து பேசியிருக்கிறார்.அதற்காக அவருக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.
நயன்தாரா வழக்கமாக புரமோஷன் நிகழ்வுகளில் இருந்து விலகியிருக்கும் நிலையில், ‘டாக்ஸிக்’ படத்துக்காக அவர் நேரில் வந்து பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளதுடன் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |