நரை முடி பிரச்சினையை அழிக்கும் சிவகரந்தை மூலிகை - எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
பொதுவாக ஒருவருக்கு நரை முடி வர பல காரணங்கள் உண்டு. பாரம்பரியமாக, வழி வழியாக ஒரு குடும்பத்தாருக்கு இளம் வயதிலையே நரைவருகிறது என்றால் அதை எந்த மருந்துக்களாலும் தீர்க்க முடியாது.
ஆனால், அது இல்லாமல் நரைமுடி வந்தால் அக்குறையை நிவர்த்தி செய்ய பக்கவிளைவுகள் இல்லாத சில எளிய மருந்துகளும் உண்டு. அந்த வகையில் நரை முடி பிரச்சினையை போக்க சிவகரந்தை என்ற ஒரு மூலிகை உள்ளது.
நரை முடியை அழிக்கும் சிவகரந்தை
இதை பூ பூப்பதற்கு முன்பு பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து சலித்து வைத்துகொள்ள வேண்டும். அதோடு கரிசலங்கண்ணி இலையையும் உலர்த்தி பொடி செய்து சிவகரந்தை பொடியுடன் சமமாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கோடி கோடியாய் அள்ளிக்கொடுக்கப்போகும் சனிபகவான்.. எந்த ராசிக்கு தெரியுமா?
எப்போது சாப்பிட வேண்டும்?
தினந்தோறும், காலை மாலை இருவேளையும் சுத்தமான பசு நெய்யில் கலந்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் இளநரை கண்டிப்பாக மறைந்து முடி கருத்துவிடும்.
இந்த மருந்து சாப்பிடும்போது மது மற்றும் புகையிலை நிச்சயம் பயன்படுத்த கூடாது. அதேபோல உணவில் அதிகபடியான காரத்தையும் புளிப்பையும் குறைக்க வேண்டும்.
மேலும் சிவகரந்தை, ஒரு அதிக மருத்துவ குணம் கொண்ட அரியவகை மூலிகைச் செடியாகும். மிகுந்த வாசனை கொண்ட சிவகரந்தை, சிறுசெடி வகையைச் சார்ந்தது.
பிளவு கொண்ட இலைகளையும் ஊதா நிறப் பூக்களையும், தண்டுகளையும் கொண்டது. சிவகரந்தை என்ற மூலிகையின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவத் தன்மை கொண்டது.