இந்த 3 ராசியினரிடம் தவறியும் சவால் விடாதீங்க... விளைவு ரொம்ப மோசமா இருக்கும்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சிங்கம் போல் அசாத்திய தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சலால்களை எதிர்கொள்வது மிகவும் பிடித்த விடயமாக இருக்கும்.
அப்படி துணிச்சலாக சவால்களை கையாளக்கூடிய ஆற்றல் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்லாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் துணிச்சலான மற்றும் தைரியமான இயல்புடையவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் சவால் விட்டால், அந்த சவாலை வெற்றிக்கொள்ளும் வரையில் ஓயவே மாட்டார்கள்.அவர்கள் எதற்கும் பயப்படுவதில்லை.
புதிய விஷயங்களை முயற்சிக்கவும், ரிஸ்க் எடுக்கவும் எப்போதும் தயாராக இருக்கும் இவர்களிடம் சவால்விட்டால் இவர்களின் பதிலடி மிகவும் மோசமாக இருக்கும்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் வலிமைக்கும், அசாத்திய தைரியத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு இயல்பாகவே இருக்காது. தாங்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் தான் ஆளவேண்டும் என்ற குணம் இவர்களிடம் ஓங்கி காணப்படும்.
இவர்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, அவர்கள் பயப்பட மாட்டார்கள். அவர்கள் தலை நிமிர்ந்து அதை எதிர்த்து நின்று போராடியேனும் வெற்றியை தனதாக்கிக்கொள்வார்கள். இவர்களிடம் சிங்கத்துக்கு நிகரான ஆற்றல் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் மர்மமானவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்களை எந்தவிடயத்திலும் தோற்கடிப்பது சற்று அசாத்தியமான விடயமாக இருக்கும்.
வெற்றிபெறும் வரையில் இவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ரகசியமாக வைத்துக்கொள்ளுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் வெற்றி பெறும் வரையில் போராடிக் கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் யாராவது சுய கௌரவத்தை சீண்டும் வகையில் பேசினால், வார்த்ததைகளில் இல்லாமல் இவர்களின் அசுர வளர்ச்சியால் பதிலடி கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |