ராஜநாகம் Vs கண்ணாடி விரியன் இரண்டில் எது அதிகம் விஷம் கொண்ட பாம்பு?
உலகத்தில் உள்ள விலங்குகளில் மனிதர்கள் பார்த்தவுடன் அச்சம் கொள்ளும் உயிரினங்களில் ஒன்று தான் பாம்புகள்.
இதில் ஏகப்பட்ட வகைகள் இருந்தாலும், ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த தனித்துவமான அம்சங்களால் தான் வேறுப்படுத்தப்படுகிறது.
பாம்புகள் பற்றி தெரிந்து கொள்வதில் நம்மிள் பலருக்கும் ஆர்வம் இருக்கும். ஏனெனின் எமது சூழலில் அடிக்கடி பார்த்து பயம் கொள்ளும் பாம்பு பற்றிய தெளிவு இல்லாவிட்டால் உயிரை கூட இழக்க நேரிடும்.
பாம்புகள் பல ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் இருந்தாலும் அவற்றில் சுமார் 100 வகைகள் மட்டுமே அதிக விஷம் கொண்டவையாக பார்க்கப்படுகின்றன.
இவற்றில் மிக அதிக விஷம் கொண்டது என விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட பாம்புகளில் ஒன்று தான் கண்ணாடி விரியன். இதனை ரசல் வைப்பர் (Russel Viper) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
அந்த வகையில், கண்ணாடி விரியன் பாம்புகள் ஏன் இவ்வளவு விஷத்தன்மை கொண்டதாக உள்ளது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கண்ணாடி விரியன்
தோற்றத்தில் பார்ப்பதற்கு மலைப்பாம்புகள் போன்று காணப்பட்டாலும் உருவத்தில் சிறியதாக இருக்கும். கண்ணாடி விரியன் பாம்புகளின் விஷம் நேரடியாக இதயத்தை தாக்கி உயிரிழக்க செய்யும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மற்ற பாம்புகள் கடிக்கப்பட்டால் சில மணி நேரங்கள் வரை மனிதர்களால் தாக்குப் பிடிக்க முடியும். அதே சமயம், கண்ணாடி விரியன் கடித்தால் சில நிமிடங்களில் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.
இந்த பாம்பு கடித்தவுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் உயிரை காப்பாற்றலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
