31 ஆண்டுகளாக திரையரங்கில் ஓடும் காதல் திரைப்படம்! எதுன்னு தெரியுமா?
பொதுவாகவே ஒரு முக்கிய ஹீரோ, ஹீரோயினின் திரைப்படம் திரைக்கு வருகின்றது என்றால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
ஆனால் அடுத்த படம் வெளியாகும் வரையில் தான் அந்த படம் திரையரங்குகளில் ஓடும். பெரும்பாலும் ஒரு படம் 100 நாட்களை கடந்துவிட்டாலே அது சூப்பர் ஹிட் படம் தான்.

இந்நிலையில் ஒரு திரைப்படம் வெளியாகி 31 வருடங்களாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் அதற்கு காரணம் அந்தப் படம் ரசிகர்களிடையே ஏற்படுத்திய தாக்கம் அது எந்த திரைப்படம் எந்த திரையரங்கில் இது வருடக்கணக்கில் ஓடுகின்றது என்பது குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.
எந்த திரைப்படம்?
31 ஆண்டுகளாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்படுகிறது என்றால் பெரும் ஆச்சரைியமான விடயம் தான். இன்றும் ரசிகர்கள் இந்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு வருகை தருகின்றனர்.

இந்தியாவின் மிக நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாலிவுட் காதல் படமான மிகவும் விரும்பப்படும் ஒரு காதல் திரைப்படமாகவும் திகழும் அந்தப் படம் தான் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘தில் வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே’ (Dilwale Dulhania Le Jayenge).
ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் யாஷ் சோப்ரா தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் கஜோல் நாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு ஜதின் - லலித் இருவரும் இணைந்து இசையமைத்தனர்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ‘க்ளாசிக்’ ஹிட். இந்தப் படத்தில் ஷாருக்கான் - கஜோல் ஜோடி கெமிஸ்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
அதுவும் எல்லா படங்களில் வரும் காதல் கதையை போல் தான் என்றாலும், அதை திரைக்கதையாக்கிய பாணி தான் ரசிகர்களை ஈர்த்தது. அந்த காலத்தில் ரூ.4 கோடியில் உருவான இந்தப் படம் ரூ.100 கோடியை வசூலித்த்து சாதனை படைத்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. ‘இந்நிலையில், தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 31 ஆண்டுகளை கடந்துள்ளது. ஆனாலும், இன்றும் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
குறித்த தியேட்டரில் பால்கனி 50 ரூபாய், வழக்கமான சீட் 30 ரூபாயும் ஆகும். படம் வெளியான முதல் நாள் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் காலை 11.30 மணியளவில் படம் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் நெட்டிசென்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |