அதிரடியாக இந்த வாரமும் ஜோடியாக வெளியேறும் இருவர்! டிக்கெட் டு ஃபினாலோவல் தப்பிய போட்டியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸில் டிக்கெட் டு ஃபினாலேவை வெல்ல போவது யார் என்பதை கடந்து, இந்த வாரம் வெளியேற போவது யார் என்பதில் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது.
இந்த வாரம் அதற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. டிக்கெட் டு ஃபினாலேவை பெற சிபி, அமீர், சஞ்சீவ் ஆகியோர் போட்டி போடுகிறார்கள்.
இவர்களில் ஃபினாலே டிக்கெட்டை வெல்ல போவது யார் என்பது இன்று நடத்தப்படும் டாஸ்கின் முடிவில் தெரிந்து விடும்.
நேரடியாகவும் முதலாவதாகவும் இறுதிப் போட்டிக்கு செல்லப் போகும் அந்த நபர் யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
இன்று நடந்த டாஸ்க்கில் சஞ்சிவ் வெளியேற்றப்பட்டார். இறுதி போட்டிக்கு அமீர் மற்றும் சிபி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சிபி டிக்கெட் டு ஃபினாலேவை வென்றால் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பம். அமிர் பாதியில் இருந்து தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். முதல் நாளில் இருந்தே சற்று தனித்து விளையாட கூடியவராக சிபி இருக்கின்றார் பார்க்கலாம்.
அவர் டிக்கெட் டு ஃபினாலேவை வெல்வாரா என்று. அதே சமயம் இந்த வாரம் பிரியங்கா, தாமரை சண்டைக்கு பிறகு வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்றதால் வருண் மற்றும் அக்ஷரா வெளியேற்றப்பட்டனர். அதிக போட்டியாளர்கள் இருப்பதால் டபுள் எவிக்ஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே இனி டபுள் எவிக்ஷன் தான் என சொல்லி விட்டார் கமலே. கடந்த வாரம் எவிக்ஷனை அறிவிப்பதற்கு முன், ஹின்ட் கொடுப்பதை போல் இரண்டு பேராக உட்கார வைத்து கேள்வி கேட்டார் கமல்.
அதே போல் இந்த வாரம் எவிக்ஷனுக்கு ஹின்ட் கொடுப்பதை போல் டாஸ்கில் இருந்து இரண்டு பேராக வெளியேற்றி வருகிறார் பிக்பாஸ்.
இதனால் நிகழ்ச்சியின் 13 வது வாரத்திலும் டபுள் எவிக்ஷன் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. டிசம்பர் 29 ம் தேதி நடத்தப்பட்ட Unofficial voting அடிப்படையில் வெளியேற்றுபவர்கள் பட்டியலில் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம்.
அதிகமான ஓட்டுக்கள் பெற்று ராஜு 23 சதவீதம் ஓட்டுக்களுடன் முதலிடத்திலும், 21 சதவீதம் ஓட்டுக்களுடன் பிரியங்கா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் குறைவான ஓட்டுக்களுடன் சிபி தான் கடைசி இடத்தில் உள்ளதால் கூறப்பட்டது. ஆனால் நேற்றைய ஆன்லைன் ஓட்டுப்பதிவு அடிப்படையில் நிரூப், தாமரை, சஞ்சீவ் ஆகியோர் தலா 7 சதவீதம் ஓட்டுக்களுடன் சமநிலையில் உள்ளனராம்.
இவர்களைத் தொடர்ந்து 8 சதவீதம் ஓட்டுக்களுடன் அமீர் உள்ளாராம். இந்த வார டாஸ்கில் இறுதி வரை ராஜுவுக்கு டஃப் கொடுத்து விளையாடியதால் பாவனிக்கு ஆதரவு பெறுகி உள்ளதாம்.
ஆனால் தாமரை, பிரியங்கா சண்டையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார டிஆர்பி கூடி உள்ளது. இதனால் தாமரை வெளியேற குறைவான வாய்ப்புக்களே உள்ளதாகவும் கூறப்படுகிறது.