வீட்டில் இந்த இடங்களில் கண்ணாடி வைத்து பாருங்க.... பணத்துக்கு பஞ்சமே வராது!
வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில் நாம் வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அதாவது நாம் அலங்காரத்துக்காக வைத்திருக்கும் பொருள்களும் அவை வைக்கப்பட்டிருக்கும் இடமும் கூட நமது வாழ்க்கையில் நடக்கும் நேர்மறை, எதிர்மறை விடங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வாஸ்து பிரகாரம் செல்வ செழிப்பு அதிகரிக்க முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டின் எந்தெந்த இடங்களில் அவசியம் வைக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
வடக்கு திசை

வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவதன் பிரகாரம் வடக்கு திசையானது குபேரர் குடியிருக்கும் திசையாக கருதப்படுகிறது.அதாவது செல்வத்தின் கடவுளாக குபேரன் வசிக்கும் இடத்தில் கண்ணடியை வைப்பதால், வீட்டில் பணப்புலக்கம் அதிகரிக்கும். புதிய வருமாகத்துக்கான வழிகள் திறக்கும். கடன் தொல்லைகள் விரைலில் நீங்கும் என்றும் நம்பப்படுகின்றது.
வீட்டின் நுழைவாயில் அருகில்

வீட்டின் நுழைவாயிலில் கண்ணாடி வைப்பது இந்து மதத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் மிகவும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது.குறிப்பாக கண்ணாடியை வீட்டிற்கு வருவோர் அனைவரும் பார்க்கும் வகையில் வைத்தால் இன்னும் சிறப்பு இதனால் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் பெருகி செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
அலமாரிக்கு எதிரில்

வாஸ்து விதிகளின் பிரகாரம் கண்ணாடியை அலுமாரி வைக்கப்பட்டிருக்கும் திசைக்கு எதிரில் அல்லது பணம் நகைகளை வைத்திருக்கும் இடத்துக்கு எதிரில் வைப்பதால், வீட்டில் பணப்புலக்கம் அதிகரிக்கும். பணம் மற்றம் பொன் என்பன கண்ணடியில் பிரதிபலிக்கும் போது இரண்டிப்பாகும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
டைனிங் டேபிளுக்கு எதிரில்

சாஸ்து நிபுணர்களின் கருத்துப்படி வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றுகூடி சாப்பிடும் மேசைக்கு எதிரில் கண்ணாடியை வைப்பமதால் வீட்டில் இருக்கும் கண்திருஷடி சம்பத்தப்பட்ட எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி பணம் குவிய ஆரம்பிக்கும். வீட்டில் லட்சுமி கடாக்ஷம் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |