உலகின் இந்த இடங்களுக்கு மேல் விமானங்கள் பறக்க தடையா! ஏன்னு தெரியுமா?
தற்காலத்தில் விமானப் பயணங்கள் பெரும்பாவலானவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்றால் மிகையாது.
தொழில் நிமிர்த்தமோ சுற்றுலா செல்வதற்கோ பலரும் விமான பயணங்களை தெரிவு செய்தாலும் விமான பயணம் என்பது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விடயங்களில் ஒன்றாகவே இருக்கின்றது.

இன்னும் சிலருக்கு விமானத்தில் செல்வது என்பது சுதந்திரத்தின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
இப்படி விமான பயணம் பெரும்பாலான மனிதர்களை ஒரு பறவையை போல் உணரசெய்கின்றது என்றாலும், விமானம் பறக்கவே முடியாது என தடை செய்யப்பட்ட இடங்களும் இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?

விமானம் உயரத்தில் பறந்தாலும், உலக வரைபடத்தில் நாம் பார்க்கும் அனைத்து இடங்களுக்கும் மேலாகவும் பறக்க முடியாது என்பதே உண்மை.
ஒரு சில பாதுகாப்பு காரணங்கள், மத நம்பிக்கைகள், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் புவியியல் சார்ந்த சவால்கள் உட்பட குறிப்பிட்ட சில காரணங்களுக்காக உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளில் "விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடங்களின் மீது அனுமதியின்றி பறப்பது சட்டப்படி குற்றம் என்பது மட்டுமல்லாமல், சில நேரங்களில் அது மிகப்பெரிய விபத்துகளுக்கும் அல்லது சர்வதேச ரீதியிலாக சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என்பதால் தான் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.
அப்படி உலகில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட வலயங்களாக" (No-Fly Zones) திகழும் இடங்கள் குறித்தும் அதற்கான காரணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
டிஸ்னி பூங்காக்கள்

உலகில் பல அதிசயங்கள் நிறைந்த தீம் பார்க் என்றால் அது நிச்சயம் டிஸ்னி பூங்காக்கள்தான். 2003-ம் ஆண்டு வரையில் இந்த பூங்பாக்களுக்கு மேல் விமானங்கள் பறக்க தற்காலிகத் தடையே விதிக்கப்ட்டிருந்தது.
ஆனால், செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு நோக்கம் கருதி இந்த இடங்களின் மேல் விமானங்கள் பறக்க நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
அந்த வகையில், கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்ட் அல்லது புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்டின் 3000 அடி சுற்றளவிற்குள் எந்த விமானமும் பறக்க அனுமதிக்கப்படுவதில்லை.
திபெத்

உலகின் மிக உயரமான பகுதிகளில் ஒன்றாகக் அறியப்படும் திபெதின் சராசரி உயரம் சுமார் 16,000 அடியாகும்.
இதனால்அதன் எல்லைகளுக்குள் அமைந்துள்ள உயரமான மலைகள் போன்ற பல்வேறு காரணிகளால், இது இயற்கையாகவே விமானப் போக்குவரத்துக்கு ஆபத்தானது என்பதால், இந்த பகுதிக்கு மேல் விமானங்கள் பறப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
சில வணிக விமானங்கள் இந்த மலைகளுக்கு மேலே பறக்க முடிந்தாலும், பயணிகளின் பாதுகாப்பிற்காக பயணிகள் விமானம் பறப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மக்கா

இது உலகின் மிகவும் முக்கியமான மத மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும், மேலும் மக்கா, குறிப்பாக புனித காபாவின் மீது எந்தப் பயணிகள் விமானமும் பறக்க அனுமதிக்கப்படுவதில்லை.
ஹஜ் யாத்திரையின் போது எந்தவொரு இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் அந்நாட்டு அரசு மிக தீவிரமாக உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதிகளின் மீது பயணிகள் விமானிகள் அல்லது ஏனைய வணிக விமானங்கள் பறந்தால், அவர்கள் கடுமையான சட்ட சிக்கல்களையும் மிகப்பெரிய அபராதங்களையும் சந்திக்க நேரிடும்.
மச்சு பிச்சு

வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் காணப்படும் அரிய வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றது.
அறிக்கைகளின் பிரகாரம் இந்த பிராந்தியத்தின் மீதும் விமானங்கள் பறப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பகுதியை மாசுப்படுத்தகூடாது என்ற நோக்கம் கருதியும் கலாசார காரணங்கள் கருமியும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் விமானம் அவசரமாக தரையிறங்க நேரிட்டாலோ அல்லது விபத்துக்குள்ளானாலோ, அது இந்த பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஈடுசெய்யவே முடியாத பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்பதற்காக இந்த சட்டம் அமுலில் உள்ளது.
தாஜ் மஹால்

உலக அதிசயங்களுள் ஒன்றாகவும், காதலர்களின் சின்னமாகவும் விளங்கும் தாஜ் மஹால் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகவும் புகழ்பெற்ற கட்டிடக்கலையாக பார்க்கப்படுகின்றது.
1632 முதல் 1653 வரை கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தின் முக்கியத்துவத்தை யுனெஸ்கோ அங்கீகரித்து, 1983 ஆம் ஆண்டில் இதை உலக பாரம்பரிய தளமாக பிரகடனப்படுத்தியது. இந்த இடத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையையும் இந்த கட்டிடத்மையும் பாதுகாக்கும் நோக்கில், இந்திய அரசாங்கம் 2006 ஆம் ஆண்டில் இப்பகுதியில் விமானம் பறக்கத் தடை விதித்தது.
பக்கிங்ஹாம் அரண்மனை

ஐக்கிய ராஜ்ஜியத்தின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் பக்கிங்ஹாம் அரண்மனை இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ இலண்டன் இல்லமும், முக்கிய பணியிடமும் ஆகும்.
இந்த அரண்மனையின் முக்கியத்துவம் காரணமாக, மன்னரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி இங்கிலாந்தின் நம்பர் 10 டவுனிங் தெரு, நாடாளுமன்றக் கட்டிடங்கள், மற்றும் இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் ஆகியவற்றிற்கு மேலேயும் பாதுகாப்பு நோக்கம் கருதி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |