பாம்பே பாம்பைக் கடித்தால் உயிரிழப்பு ஏற்படுமா? அறிவியல் விளக்கம்
பொதுவாகவே பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்லுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் கொடிய விஷமானது உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்பது தான்.
பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்குக் காரணம் தனது இரையை வேட்டையாடுவதற்காகவே. ஆனால், பாம்புகள் மனிதர்களைக் கடிப்பது வேட்டையாடுவதற்காகவோ அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தினாலோ அல்ல. மாறாக, மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் மாத்திரமே.

உலகில் உள்ள அனைத்து பாம்புகளும் விஷமுடையவை இல்லை என்றாலும் பாம்புகளிடம் எப்போதும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
பாம்பு கடித்தால் மனிதர்களுக்கு உயிராபத்து நேரும் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், ஒரு பாம்பு இன்னொரு பாம்பை கடித்தால் என்னவாகும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? இது குறித்த அறிவியல் ரீதியான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிவியல் ஆய்வுகள் கூறுவது என்ன?
பொதுவாக பாம்புகளின் கொடிய விஷமானது மனிதர்கள் உட்பட பொரும்பாலான உயிரிங்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும். இருப்பினும் விஷமுள்ள பாம்புகள் தங்கள் சொந்த இனத்தின் விஷத்திற்கு ஓரளவு எதிர்ப்புத் திறனை கொண்டவையாக இருக்கும் என அறியில் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அதற்கு அர்த்தம் அவை முற்றிலும் எதிர்ப்பு சக்தியுடையவை என்பது கிடையாது, ஆனால் அவற்றின் உடல்கள் விஷத்தின் விளைவுகளை பொறுத்துக்கொள்ளும் ஆற்றலை இயல்பாகவே கொண்டிருக்கின்றன. இந்த எதிர்ப்பு தன்மை பரிணாம வளர்ச்சியின் விளைவாக பெறப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக பாம்புகள் இனச்சேர்க்கையின் போதோ அல்லது ஒன்றையொன்று தாக்கும் போதோ பாம்புகள் ஒன்றையொன்று கடித்துக்கொள்கின்றன. அப்படி ஒவ்வொரு கடியுமே உயிராபத்தை ஏற்படுத்தும் என்றால், பாம்பு இனத்தின் வாழ்க்கையே ஆபத்தில் இருந்திருக்கும் அல்லவா?
உதாரணமாக ஒரு நாகப்பாம்பு மற்றொரு நாகப்பாம்பைக் கடிக்கும் பட்சத்தில், நிச்சயம் விஷம் உள்ளே செல்லும். இருந்தாலும் அது பெரும்பாலும் ஆபத்தான விளைகளை ஏற்படுத்துவது கிடையாது.
காரணம் இயற்கையாகவே நாகப்பாம்புகள் ஆன்டிபாடிகள் மற்றும் புரத அமைப்புகளைக் கொண்டிருப்பதால், குறித்த பாம்புகள் தங்கள் இனத்தின் விஷத்தை நடுநிலையாக்கும் ஆற்றலை கொண்டுள்ளன.
அதனால் கடித்த இடம் வீங்கியிருக்கலாம், காயமடைந்திருக்கலாம் அல்லது பலவீனமாகவும் இருக்கலாம். ஆனால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதானது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

மேலும் ஒரு வியப்பூட்டும் உண்மை என்னவென்றால், பாம்புகள் சில நேரங்களில் தங்களைத் தாங்களே கடிக்கின்றன.இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் உயிராபத்து ஏற்படுவது கிடையாது. பாம்பு கடியால் இல்லாமல் கடிப்பட்ட இடத்தில் வேறு தொற்றுக்கள் ஏற்படுவதால் இறப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
ஆனால் இது எல்லா இனத்தை சேர்ந்த பாம்புகளுக்கும் பொருந்தாது.சில விதிவிலக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |