மரணம் நெருங்கும் போது ஒருவர் இந்த அறிகளை காண்பாராம்... எச்சரிக்கும் கருட புராணம்!
பொதுவாகவே அனைத்து மதங்களும் இறப்புக்கு பின்னர் சொர்க்கம் மற்றும் நரகம் இருப்பதாகவும் இந்தவுலகில் செய்யும் பாவங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் வெவ்வேறு வழிகளில் பல்வேறுப்பட்ட மொழிகளில் குறிப்பிடுகின்றது என்றால் மிகையாகாது.
அந்த வகையில் இந்து சாஸ்திரத்தில் கருட புராணத்தில் இறப்பு பற்றியும் இறப்பு நெருங்குவதற்கான அறிகுறிகள் பற்றியும் அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பிலும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்துக்களில் பொரும்பாலானவர்கள் இதன் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். எனவே கருட புராணத்தின் பிரகாரம் இறப்புக்கு முன்னர் தோற்றும் முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.
மரணம் நெருங்குவதன் அறிகுறிகள்
ஒருவருடைய நிழல் தண்ணீரிலோ, எண்ணெயிலோ, கண்ணாடியிலோ தோன்றாவிட்டாலோ அல்லது ஒருவரின் நிழல் சிதைந்து காணப்பட்டாலோ, உயிரானது உடலை விட்டு வெளியேறும் நேரம் நெருங்கிவிட்டது என்பதைப் உணர்த்துகிறது.

ஒருவன் இறக்கும் நாட்கள் நெருங்க நெருங்க அவனது பார்வை மங்கத் தொடங்குகிறது. தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கக்கூட முடியாத நிலை ஏற்படும்.அதாவது எம தூதர்கள் அருகில் இருப்பதால், இந்த உலகத்தில் இருப்பவர்களை பார்க்க முடியாத நிலை உருவாகும் என குறிப்பிடப்படுகின்றது.
மரண நேரம் நெருங்கும்போது, எமனின் இரண்டு தூதர்கள் வந்து இறக்கும் நபரின் முன் நிற்பதாக கருடபுராணம் கூறுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் தீய செயல்களைச் செய்தவன் இந்த யமதங்களுக்கு அஞ்சுகிறான் என்றும் அதிக நல்ல செயல்களை செய்தவர்களுக்கு இறப்பு பற்றிய அச்சம் இருக்காது என்றும் கருட புராணம் குறிப்பிடுகின்றது.

கருட புராணத்தில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில் இறப்பதற்கு முன் ஒருவரின் கையில் உள்ள ரேகைகள் மிகவும் மங்கலாகிவிடும். சிலருக்கு அவை முற்றிலும் தெரியாமலேயே போய்விடும். மரணம் நெருங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னரே இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிடும்.
மேலும், மரணம் ஒருவரை நெருங்கின்றது என்றால், விசித்திரமான கனவுகள் வரக்கூடும் என்று கருட புராணம் கூறுகிறது. ஒரு நபர் தனது கனவுகளில் அணைந்துபோன விளக்கு உட்பட சில விசித்திரமான பொருட்களை கனவில் காணக்கூடுமாம்.

இறப்பு நெருங்குகின்றது எனும் பட்சத்தில் ஒருவர் தன்னைச் சுற்றி ஆன்மாக்களை உணரத் தொடங்குகிறார். அவை அவரது மூதாதையர்களின் ஆன்மாக்களாக இருக்கலாம்.
தங்கள் உறவினர் இப்போது மறுவுலகத்திற்கு வரப்போவதால், அவர்கள் அவரது வருகையைக் கொண்டாடத் தொடங்குவார்கள். இதன் விளைவாகவே ஆன்மாகள் கண்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும் என கருட புராணம் குறிப்பிடுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |