சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா?
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு கட்டாயமாக பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றியின் ரகசியம்
சாணக்கிய நீதியின் படி, ஒருவர் எவ்வளவு அழகாக தோற்றமளித்தாலும், அறிவு இல்லையென்றால், அவரிடம் காணப்படும் அனைத்து செல்வங்களும் பயனற்றது. நம்மிடம் எதுவும் இல்லாத போதும் தெளிந்த அறிவு இருந்தால் வெற்றி நிச்சயம்.
சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால், உங்களின் கனவுகள் குறித்து யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாதீர்கள்.அதை செய்து முடிக்கும் வரையில் ரகரியமாக வைத்திருங்கள். இந்த பழக்கம் விரைவில் உங்கள் இலக்கை அடைவதற்கு துணைப்புரியும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் நீங்கள் செய்த தவறுகளை மற்றவர்களிடம் சொல்லும் குணத்தை முற்றிலும் விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக அதில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தை உங்களின் வெற்றிப் பயணத்திற்காக படிகளாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்களின் தவறுகளை உங்களால் கண்டுப்பிடிக்க முடிவது தான் அறிவின் உச்சம்.
இது உங்களை நிச்சயம் வெற்றியாளர்களாக மாற்றும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் வெற்றியை குவிக்க வேண்டும் என்றால் எல்லாவற்றுக்கும் மேலாக கடின உழைப்பும் ஆழ்ந்த பொறுமையும் விடாமுயற்ச்சியும் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றார். இந்த குணங்கள் இருப்பவர்களிடம் வெற்றிகள் குவிவது உறுதி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |