விமானத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே பார்த்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி!
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தொழில் விடயத்தில் மிகவும் பொறுப்புள்ளவராக இருந்தாலும், சொந்த வாழ்க்கையில் செம fun ஆன ஒரு நபர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
அந்தவகையில், பிரியங்கா தேஷ்பாண்டே லண்டனில் இருந்து சென்னைக்கு திரும்பும் போது, விமானத்திலிலேயே செம கியூட்டாக மேக்-அப் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார்.

அதன் பின்னர் பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்கு முன்னர் இருந்ததை விட இப்போது மிகவும் அழகாக தோன்றுகின்றார்.
தற்போது பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவதுடன் இணையத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே லண்டனில் இருந்து சென்னைக்கு திரும்பும் போது, விமானத்திலிலேயே செம கியூட்டாக மேக்-அப் போட்டு அசத்திய காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |