பஸ் டிரைவருக்கு ஹார்ட் அட்டாக்... அடுத்த நொடியே பேருந்தை இயக்கி உயிரை காப்பாற்றிய சிங்க பெண்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் தான் வந்த பேருந்தை ஒட்டிய டிரைவர் மயங்கியதால் தானே பேருந்தை ஒட்டி டிரைவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் மொராச்சி சின்சோலி என்கிற இடத்திற்கு பெண் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சுற்றுலா அழைத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்த திடீர் மாரடைப்பால் தடுமாற்றம் அடைந்த அவர் ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி விழும் நிலைக்கு சென்றுவிட்டார்.
இதை கவனித்த பெண் பயணி ஒருவர் பேருந்தை நிறுத்தும்படி கேட்டார். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது.
இதை கண்ட பெண் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஓட்டுனரின் நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டே வந்ததால்.
#Pune woman drives the bus to take the driver to hospital after he suffered a seizure (fit) on their return journey. #Maharashtra pic.twitter.com/Ad4UgrEaQg
— Ali shaikh (@alishaikh3310) January 14, 2022
பெண் பயணிகளில் ஒருவரான யோகித்தா சதவ் என்பவர் தானே பேருந்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்து ஓட்ட ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் மீண்டும் அந்த டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் விவேகத்துடன் செயல்பட்ட அந்த பெண் சாமர்த்தியமாக பேருந்தை செலுத்தி அந்த ட்ரைவரை மருத்துவமனையில் அனுமதித்தார். அந்த பெண் பயணியின் விவேகமான செயல்பட்டால் அந்த பேருந்து ஓட்டுனரின் உயிர் காக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி செய்திகளில் தற்போது மிகவும் வைரலாக பரவிவருகிறது.