கதறும் குழந்தை! நொடியில் உயிரை காப்பாற்றியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
கஜகஸ்தான் பகுதியை சேர்ந்த நபர் தனது உயிரை பணயம் வைத்து மூன்று வயது சிறுமியை காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
100 அடி உயரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருந்த சிறுமியை காப்பாற்றியதை அடுத்து, அந்த நபர் ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.
இதோடு இந்த சம்பவம் அடங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Day 588: Let’s have more nice things...
— Brad Ferguson (@BradFergus0n) May 12, 2022
...Like incredibly brave & quick-thinking hero, Sabit Shontakbaev jumping into action when he spotted a girl hanging from an 8th story window, 80ft up.#MoreNiceThings pic.twitter.com/4SHfRCgnaq
க்யூட்டாக பேசிவிட்டு டெரராக மாறிய குட்டி தேவதை....அம்மாவுக்கு வந்த பரிதாபநிலை!
குழந்தையின் தாய் ஷாப்பிங் சென்று விட்டதை அடுத்து வீட்டில் விளையாடி கொண்டு இருந்த மூன்று வயது சிறுமி குஷன்கள் மற்றும் விளையாட்டு பொம்மைகளை ஜன்னல் வெளியே தூக்கி எறிந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென ஜன்னலுக்கு வெளியே வந்த குழந்தை, விரல் நுனியில் பிடித்துக் கொண்டு 100 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.
இதனை பார்த்த சபித் என்பவர் விரைந்து செய்லபட்டு குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
பதக்கம் வழங்கி கௌரவிப்பு
தனது உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய ஷோண்டக்பெவ் சபித்-ஐ நேரில் அழைத்து கஜகஸ்தான் அவசர நிலை அமைச்சகம் பாராட்டி அவருக்கு பதக்கம் வழங்கி சிறப்பித்து இருக்கிறது.