மாஸ் காட்டிய வில்லன் நடிகர் பொன்னம்பலமா இது? இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க!
வில்லன் நடிகர் பொன்னம்பலத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை திரையில் பார்த்தாலே மிரள வைத்த வில்லன் நடிகர் பொன்னம்பலம்.
அவரின் தற்போதைய நிலை குறித்த தவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லன் நடிகர் பொன்னம்பலம்
நாட்டாமை, முத்து உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் பொன்னம்பலம்.
அதன் பிறகு கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார்.சில படங்களில் கௌரவ வேடங்களிலும் அவர் தோன்றினார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ள பொன்னம்பலம், தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நபராக அறியப்பட்டவர்.
தன்னுடைய அசாத்திய நடிப்பு மற்றும் கம்பீரமான தோற்றத்தால் நிஜ வில்லனைப் போலவே சிறப்பாக நடித்து அசத்துவார்.

90ஸ் வில்லன் காதாப்பாத்திரங்களில் பொன்ம்பலத்துக்கு ஒரு தனித்துவமான இடம் இருக்கின்றது என்றால் மிகையாகாது.
ஒரு காலகட்டத்தில் சினிமாவில் மாஸ் பாட்டிய இவர் இன்று, நடக்கக்கூட முடியாமல் வீல் சேரில் அமர்ந்திருக்கும் நிலை ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

சிறுநீரக கோளாறு
நடிகர் பொன்னம்பலத்துக்கு கடந்த 2023ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள இவருக்கு போதிய பணம் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, தனக்கு உதவுமாறு காணொளி ஒன்றை வெளியிட்டார்.
இதை பார்த்த நடிகர் சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ், நிழல்கள் ரவி, மோகன், கமல்ஹாசன், சிம்பு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அவருக்கு உதவினர்.அதன் பின்னர் உடல் நிலை கொஞ்சம் தேரியது.

இதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசிய வாழ்க்கை அனுபவங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில், மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நடிகர் பொன்னம்பலம் நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் நோய் முழுமையாக குணமாகவில்லை. தற்போது அவர் வாரத்திற்கு 2 முதல் 3 நாட்கள் வரை டயாலிசிஸ் செய்து வருகிறார்.

சமீபத்தில் அவரது வீட்டின் அருகே நடைபெற்ற ஒரு துக்க நிகழ்வில், வீல் சேரில் அமர்ந்தபடியே கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் அவர் வீல் சேரில் இருந்தபடியே ஆட்டம் போட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, ஒரு காலத்தில் எப்படி கம்பீரமாக இருந்தவர். இப்படி ஆகிவிட்டாரே என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |