ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே!
கடந்த சில மாதங்களாகவே பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் திருமணம் என்ற தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், பெப்ரவரி மாதத்தில் திருமணம் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த ஒரு காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.

நடிகை ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து ராஷ்மிகா நடிப்பில் Chhaava என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள்.
ஆனால் அவர்களின் காதல் விவகாரம் குறித்து இதுவரையில் வாய் திறக்கவில்லை. இருப்பினும் அவர்கள் காதலிப்பது உலகறிந்த விடயம் தான்.

கடந்த வருடம் நிச்சயதார்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா -விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு பெப்ரவரி மாதத்தில் திருமணம் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக ஒரு காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |