விஜய்யின் தங்கையாக நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா?
வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த சரண்யா மோகனின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை சரண்யா மோகன்
தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் தான் நடிகை சரண்யா. பின்பு இதனைத் தொடர்ந்து பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார்.
2011ம் ஆண்டில் வெளியான வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார். பின்பு தமிழில் கடைசியாக 2014ம் வெளியான ‘காதலை தவிர வேறொன்றும் இல்லை’ படத்தில் நடித்து, பின்பு சினிமாவிற்கு முழுக்கு போட்டுள்ளார்.
சரண்யா கடந்த 2015ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பர் அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு, ஆனந்த பத்பநாபன், அன்னபூர்ணா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது சரண்யா மோகன் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடிக்க சில அழைப்புகள் வந்தபோதும் அதை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |